வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

கண் நோய்கள்

கண்ணில் நீர் வடிதல் பிரச்னை உள்ளவர்கள் வேளைக்கீரை, இஞ்சி, மிளகு, வெல்லம் அனைத்தையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் 15 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

வேப்பிலை, சுக்கு, இந்துப்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சூடுபடுத்தி கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்வலி மற்றும் கண் அரிப்பு குணமாகும்.

பூண்டு, சீரகம், இஞ்சி ஒவ்வொன்றிலும் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து இடித்து பனைவெல்லம் சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். கண்ணில் நீர்வடிதல் பிரச் னைக்கும் தீர்வு காணலாம்.

உடல் சூட்டின் காரணமாக கண்களில் பிரச்னை ஏற்படுபவர்கள் வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும்.

வில்வ இலையைப் பொடி செய்து வெந்தயம் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

இரவில் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் கண்ணில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

லெட்டூஸ் கீரையை அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட்டால் கண் நோய் குணமாகும்.

முருங்கைக் கீரையை நீர் சேர்க்காமல் அவித்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.

மருதாணி இலையை அரைத்து கண்கள் மீது வைத்து கட்டிக் கொண்டால் கண்களில் நீர்வடிவது நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக